Monday, September 15, 2014

உங்களுடைய சொத்துக்களின் அரசு மதிப்பீட்டை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
http://www.tnreginet.net/index.asp
Photo: உங்களுடைய சொத்துக்களின் அரசு மதிப்பீட்டை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
http://www.tnreginet.net/index.asp

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!


1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். 

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.



மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம். 



33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.



Thanks to Bluilders Line Monthly

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...?

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...?




ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp


ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

 OR
http://www.tnreginet.net/guideline_value.asp

பழைய ‘பிளாட்’ வாங்குகிறீர்களா?

பழைய ‘பிளாட்’ வாங்குகிறீர்களா?

மனையின் மதிப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்டவை அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை அதிகரிப்புக்கு அடிப்படை காரணங்களாக மாறுகின்றன. இதன் எதிரொலியாக நகர்புறங்களில் வீடு வாங்க நினைப்பவர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டிய நிலையை சந்திக்க வேண்டியுள்ளது. பணம் புரட்டுவது ஒருபுறம் இருக்க வாங்கும் வீடு எத்தகைய வில்லங்கத்துக்கும் இடம் கொடுக்காமல் இருக்கிறதா? என்பதையும் உற்றுநோக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கும்போது ஆழமாக அலசி ஆராய வேண்டி இருக்கிறது. அதேவேளையில் அடுக்குமாடி குடியிருப்பில் பழைய ‘பிளாட்டை’ வாங்குவதாக இருந்தால் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதிக சிரமப்பட வேண்டியது இருக்காது. விலையும் பத்து, பதினைந்து லட்சம் வரை குறைவாக கிடைக்கும் என்ற மனோபாவம் சிலர் மனதில் எழுந்திருக்கிறது. அதன் தாக்கமாக பழைய ‘பிளாட்டை’ வாங்கி புதுப்பித்து குடிபுகும் பழக்கமும் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
இருந்தபோதிலும் பழைய ‘பிளாட்டை’ வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்று பார்ப்போம்.
* பழைய பிளாட் விலைக்கு வருகிறது என்றால் அது விற்பனை செய்யப்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
* வீட்டை விற்பனை செய்பவரின் பின்னணி என்ன? என்ன காரணத்துக்காக விற்கிறார்? வீட்டின் உரிமை தொடர்பாக பிரச்சினை ஏதும் உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். அல்லது அந்த வீட்டை கட்டிய பில்டருக்கும், அதை வாங்கிய மற்றவர்களுக்கும் இடையே நில உரிமை தொடர்பாக பிரச்சினை ஏதும் உள்ளதா? அது தொடர்பான வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரிப்பு இருக்க வேண்டும். முக்கியமாக வீடு குறைந்த விலைக்கு வருகிறது என்றால் இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
* வீடு, அது சார்ந்த இடம் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று அலசி ஆராய வேண்டும். வீட்டுக்கான மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும்.
* வீடு விதிமுறை மீறல் இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறதா? அல்லது விதிமீறல் புகார் எதுவும் விசாரணையில் உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். ஏனெனில் சில இடங்களில் நான்கு மாடிக்கு மட்டும் அனுமதி வாங்கப்பட்டு ஐந்தாவது மாடியிலும் வீடுகள் எழுப்பி இருக்கலாம். அனுமதியின்றி கட்டப்பட்ட விவரம் மறைக்கப்பட்டு வீட்டை விற்பதற்கு முயற்சி நடக்கலாம். ஆகையால் உஷாராக இருக்க வேண்டும்.
* வீடு இருக்கும் இடம் சூழ்ந்த பகுதி அரசின் திட்டங்களுக்காக கையப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என்றும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்ற வசதிகளை கொண்டதாக வீடு இருக்கிறதா? என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
* வீட்டை வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. வீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு லாபம் தரக்கூடியதாக இருக்கிறதா? வீடு அமைந்திருக்கும் பகுதி பிற்காலத்தில் மேலும் விலை மதிப்பு உயரும் வகையில் வளர்ச்சி அடையுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* பழைய வீட்டை வீட்டு உரிமையாளரிடம் இருந்து நேரடியாக வாங்குவதே நல்லது. வீட்டுக்கான மதிப்பிடப்பட்ட ரொக்கப்      பணத்தையும் நேரடியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காசோலை மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுவது நல்லது.

பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.
* இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.
* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்தரை நாடி பத்திரம் எழுதும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். அப்போது பத்திரத்தில் சேர்க்க வேண்டிய முக்கியமான விவரங்கள் விடுபட்டு போகாமல் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். அதற்கு நேரடியாக முத்திரைத்தாளில் எழுத தொடங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத்தும் இடம் பெற்று இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
* ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுத வேண்டும்.
* முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.
* வாங்கும் இடத்தின் அளவு எவ்வளவு? அது இருக்கும் திசை, அதை சூழ்ந்துள்ள விவர குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
* இந்த விவரங்களில் பிழைகள் எதுவும் இல்லாதவாறு சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவசர கதியில் பத்திரப்பதிவுக்கான வேலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பிழைகள் நிகழ்வதை பெரும்பாலும் தடுக்கும்.
* பத்திரப்பதிவு செய்யும் நாளில் வாங்கும் சொத்துக்கு கொடுத்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன்பே சென்று விட வேண்டும்.
* பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
* பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.
* ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும். சில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து பத்திரத்தை வாங்கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது. அதுபோல் பத்திரம் வாங்கிய உடனே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ணப்பித்து விட வேண்டும்.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? 

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் 
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் 


விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து: பிரிவு.


இலாகா: துறை.


கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்: நில அளவை எண்.


இறங்குரிமை: வாரிசுரிமை.


தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

*********************************************************************************************
கிராமக் கணக்கு எண் 10 - பிரிவு1 என்பதே சிட்டா எனப்படும்.1முதல்
100 அல்லது 1000 என்றபடி கிராம பட்டாதாரர்கள் மற்றும் பட்டா நிலங்களின் 
விஸ்தீரணத்தின் அளவின் அடிப்படையில் பட்டாஎண்கள் பதியப்படும். 
ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் ........பசலியாண்டில்,.....ஜில்லா,......தாலுக்கா,......கிராமத்தில்,.....பட்டா எண்ணில்,
பட்டாதாரர் பெயர்.............போன்ற பதிவுகள் செய்யப்பட்டிருக்கும்.

புல எண், உட் பிரிவு எண், விஸ்தீரணம், தீர்வை ஆகிய விபரங்கள்
புஞ்செய் - நஞ்செய் புல வாரியாக பதியப்பட்டிருக்கும்

இது 10-1 கிராமக் கணக்கின் நகல்தானே தவிர சான்று கிடையாது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூபாய்கள் 20 பெற்றுக் கொண்டு
கணினி 10 -1 சிட்டா நகல் வழங்கப்படுகின்றது. பட்டாக்களின்
மொத்த தொகுப்பே சிட்டா என்பதாகும். பட்டாவும் சிட்டாவும் 
ஒன்றேயாகும். 
*********************************************************************************************

இணையதளத்தில் பட்டா, சிட்டா விவரங்கள் கிடைக்க ஏற்பாடு

இணையதளத்தில் பட்டா, சிட்டா விவரங்கள் கிடைக்க ஏற்பாடு : கணினிமயமாகிறது நில அளவை
தமிழகத்தில், நில அளவை, வருவாய், பதிவுத் துறைகளை, கணினி வலை அமைப்பு மூலம் ஒன்றிணைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிவடைந்த பிறகு, இணையதளம் மூலம், அனைத்து நிலங்கள் குறித்த பட்டா, சிட்டா விவரங்களை அறிந்து கொள்ளும் திட்டம், முழுமை பெறும்.
சென்னை மற்றும் இதர மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்க விரும்புவோருக்கு, விற்பனையாளர் காட்டும், பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு விவரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வதற்கான இணையதள வசதிகள் எதுவும், அரசு தரப்பில் இல்லை. இதனால், ஆவணங்கள் உண்மையானது தானா என்பதை சரிபார்க்க, வட்டாட்சியர் அலுவலகங்களையே, மக்கள் நம்ப வேண்டி உள்ளது. மேலும், நிலம் வாங்கியோர், தங்கள் பெயரில் உள்ள ஆவணங்கள், வேறு யார் பெயருக்காவது, முறைகேடாக மாற்றப்பட்டு உள்ளதா என்பதையும், தெரிந்துகொள்ள முடிவதில்லை.
கணினிமயமாக்கல் : கடந்த பல ஆண்டுகளாக, பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், கையால் எழுதப்பட்டே வந்தன. இதை, கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிதாக பதிவாகும் ஆவணங்கள், கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மட்டுமே, ஓரளவுக்கு இப்பணிகள் நடந்துள்ளன. கிராமப் பகுதிகளில், இன்னும் முழுமை பெறவில்லை.
எங்கும், எப்போதும் : இப்பணிகள், முழுமையாக முடியாத நிலையில், “எங்கிருந்தும், எந்நேரத்திலும்’ என்ற, இணையதளம் மூலம், நிலம் பதிவேட்டு விவரங்களை அறியும் புதிய திட்டத்தை, கடந்த 2008, மே மாதம், தமிழக அரசு துவக்கியது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வெளியில் உள்ள, விவசாய நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், இதில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான இணையதள முகவரி: taluk.tn.nic.in/eservicesnew/index.html இதன்மூலம், அனைத்து மாவட்டத்திலும் உள்ள, விவசாய நிலங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்; இதன் பிரதியை, பதிவிறக்கம் மற்றும் “பிரின்ட்’ எடுக்கலாம். இந்த வசதி, மற்ற குடியிருப்பு நிலங்களுக்கு இல்லை.
மத்திய அரசின் திட்டம் : இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுத் துறையும், வருவாய்த் துறையும் ஒருங்கிணைந்து, நில ஆவணங்களை செம்மைப்படுத்துதல்; அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை, தானாக ஏற்றுக் கொள்ளுதல்; நிலத்தின் பதிவுகளை ஒன்றிணைத்தல் ஆகிய பணிகளுக்காக, நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை, தேசிய அளவில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, தமிழகத்துக்கு, 2.81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 வட்டங்கள், நெல்லை மாவட்டத்தில், 11 வட்டங்களிலும், நகர்ப்புற நில ஆவணங்களின் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நில அளவை பயிற்சி மையத்தில், தேசிய நில அளவை ஆவணங்களை நவீனமாக்கும் மையம், புதிதாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.
தீர்வு எப்போது? : இதுதொடர்பாக, வருவாய் மற்றும் நில நிர்வாகத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில பதிவேடு ஆவணங்கள் அனைத்தையும் கணினிமயமாக்குவது, ஒரு குறிப்பிட்ட துறை மட்டும், தனியாக செய்து முடிக்கும் பணியல்ல. நில அளவை, வருவாய் மற்றும் பதிவுத் துறைகள் பணிகளை, முதலில், அந்தந்த துறை அளவில், கணினி வலை அமைப்பு மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதன்பின், இந்தத் துறைகளுக்குள், கணினி வலை அமைப்பு அடிப்படையில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதில் முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும், கணினிமயமாக்கப்பட்ட நில அளவைப் பிரிவை துவக்கும் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய வலையம் : அடுத்து, அனைத்து வட்ட அலுவலகங்களையும் ஒன்றிணைக்க, அகண்ட பரப்பு வலையம் (கூNகுஙிஅN) அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மேலும், வட்ட அலுவலகங்களில், பட்டா மாற்றல் தொடர்பான அனைத்து விவரங்களையும், உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும்; இதை, தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கவும், உரிய மென்பொருளை உருவாக்கும் பொறுப்பு, தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, தங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, “அ’ பதிவேடு விவரங்களை, இணையதளம் மூலம் மக்கள் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
“இ-பட்டா’ சாத்தியமா? : நில அளவை, வருவாய், பதிவுத் துறைகளை, கணினி வலை அமைப்பு மூலம் ஒன்றிணைத்தபின், பட்டா, சிட்டா விவரங்களை, இணையதளம் மூலம் பெறுவதுடன், ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும், வழங்கும் பணிகளும், ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படும். வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து, இணையதளம் மூலமாகவே, பட்டா, சிட்டா உள்ளிட்ட சேவைகளை, பொது மக்கள் பெறுவது சாத்தியமாகும். அப்போது தான், “இ-பட்டா’ முறை, தமிழகத்தில் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
ஆண்டுக்கு 35.18 லட்சம் ஆவணங்கள் : தமிழகத்தில், இப்போதைய நிலையில், ஆண்டுக்கு, 35.18 லட்சம் ஆவணங்கள், பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு, 6.6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பத்திரப் பதிவுகள், நகர்ப்புறம் சார்ந்த நிலம் விற்பனை மற்றும் பரிவர்த்தனை தொடர்புள்ளவை என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வருவாய்த் துறை மூலம், கடந்த ஓராண்டில் மட்டும், 14.60 லட்சம் பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளன.